Thursday, March 29, 2012

கனாக் காலம்

வகுப்பின் முதல்நாள் காலை;
நம்பிக்கையுடன் வைத்தோம்
உள்ளே எங்கள் காலை.

மனதின் ஆவல்
இதயத் துடிப்பினில் கேட்கும்;
ஒவ்வொரு கண்ணும்,
புதிராய் மின்னும்.

புதுப்புது முகங்கள்,
அறிமுகம் மெதுவாய்;
அதிலுள்ள தயக்கம்,
அதை ஆக்கிடும் அழகாய்.
புதுப்புது உறவுகள்
தோழனாய் தோழியாய்.

கடமை ஏதும் இல்லை;
கவலை ஏதும் இல்லை;
விடுதி உணவு என்ற
ஒன்றே ரொம்ப தொல்லை;

ஆசிரியரின் அறிவுரை
எங்க மூளைக்கு எட்டல;
ஊர் முழுக்க சுற்றிட
மீதி நேரம் பத்தல;


இரவுக்கு காவலாய்
விடிய விடிய அரட்டைகள்;
நிலவு கண்டு வியக்கும்
எங்கள் இந்தத் திறமைகள்;

விடிந்தபின் சூரியனை
எழுப்பிவிட்டு தூங்குவோம்;
கனவில் கன்னி தேவதைகள்
கண்டு தூக்கம் தொலைத்திடுவோம்.

கற்றது நாங்க கள்ளத்தனம் இல்ல
கல்லூரி பரிட்சையில் தோல்வியும் இல்ல.

நாங்க ஒரு வரி படிச்சு
ஒன்பது பக்கம் எழுதி

வாத்தி ஒரு மணி நேரத்தில்
எண்பது தாள் திருத்தி

நாலு சுவருக்குள் உருவாகும்
பட்டதாரி நாங்கள்,
நாட்டின் எதிர்காலத் தூண்கள்.

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...