Wednesday, October 31, 2012

பள்ளி

நான்கு வயதில்
தொடங்கிய உறவு;
பதினான்கு வருடம்
 தொடர்ந்த உறவு;
 
தனியாய் சாப்பிடக்
கற்றது உன்னோடு;
இன்றும் நினைவில்
அது என் கண்ணோடு;

வாத்தியார் அடித்து நான்
அழுததும் நீ கண்டாய்;
கண்ணீர் பிதுங்க நான்
சிரித்ததும் நீ கண்டாய்;

நண்பன் என்ற சொல்லை
அறிமுகம் செய்ததும் நீதான்;
என் முதற் காதல்
அரும்பிய இடம் நீதான்;

நான் வாழக் காரணம்
நீ தந்த ஞானமே;
நீ கொடுத்த கல்வியால்
என்றும் இல்லை ஊனமே;

உன்னோடு வாழ்ந்த காலம்
என்றும் என் பொற்காலம்;
உன்னால் தான் நானிங்கு
வாழ்கிறேன் ஓர் நற்காலம்.

DEDICATING THIS TO MY SCHOOL - SRI KANNA MATRICULATION HR.SEC.SCHOOL, PULIANGUDI-627855

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...