Sunday, October 14, 2018

ஆற்றின் பாடம்

இமயத்தில் உயரப் பிறந்ததால் தானா
கங்கையே நீ புனிதச் சின்னமோ?
கீழே தாழப் பிறந்ததால் தானா
காவேரியே நீ கலவரச் சின்னமோ?


ஆற்றின் அழகு அது
தோன்றும் இடம் பொறுத்து
அவ்வாற்றின் பெருமை அது
ஓடும் தடம் பொறுத்து

பிறப்பும் வேறு பாதையும் வேறு
இறுதியில் கலக்கும் கடலில் பாரு
பிறப்பின் வர்ணம் பொருட்டே இல்லை
செயலால் யாதும் ஓரிடம் சேரும்

ஆறு ணர்த்தும் இம்மெய் உணரேல்
மனிதா நீ
இம்மை விடுத்து எழுமையும் உயரேல்.

No comments:

Post a Comment

அவள்

உன் அழககைக் கொஞ்சம் பாடிச்சொல்ல  தமிழும் இங்கே திணறுதடி  உன் இதழை மெல்ல வருடிச்சென்ற  காற்றும் வழியை மறக்குதடி .. நீ சோம்பல் முறிக்கும் அழகை...